Posts

Showing posts from February, 2018

தெய்வீகப் பாண்டியர்கள்

Image
தெய்வீகப் பாண்டியர்கள் #மாயோன் வழிவந்த சந்திர குலத்தவர்கள் பாண்டியர்கள் "இரண்டாம் ராஜசிம்மன் பாண்டியன்(கிபி741) சின்னமானூர் கல்வெட்டு" கல்வெட்டு விவரம்: " திருவொடு தெள்ளமிர்தத்தோடு; செங்கதிரொளி கௌஸ்து பத்தொடும்  அருவிமதக் களிற்றொடு தோன்றி;அரன்அவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்திங்கள் முதலாக வெளிப்பட்டது; நாற்றிசையோர் புகழ் நீரது; பாரத்துவாஜிகளால் நேரே ஸ்துதிக்கப்பட்டது;;விரவலர்க்கரியது;மீனத்துவ சாசனத்து ;பெருவளர் சீர்  "அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது"; ஊழியூழிதோரும்  உள்ள நின்ற. ஒருவனை உடையது வாழிய பாண்டியர்" பொருள்:  திருவாகிய லக்ஷ்மியோடும், அமிர்தத்தோடும், செம்மையான கதிரவனைப் போன்ற ஒளி உடைய கௌஸ்துப மணியோடும், மதக் களிறாகிய ஐராவதத்தோடும், சிவபெருமானால் அணியப்படும் சந்திரன் தோன்றினான்..  அந்தச் சந்திரனிலிருந்து தோன்றியதும், நான்கு திசையும் புகழ் உடையதும், வெல்வதற்கரியதும், மீன் கொடியை உடையதும், அகஸ்திய முனிவரைத் தன் ராஜகுருவாக, ப்ரோகிதராகக் கொண்டதுமான சிறப்பை உடையதுமான பாண்டியர் குலம் வாழ்கவே! விளக்கம் -  விஷ்ண

மாயோன்

Image
மாயோன் -1 Who is Mayon? Tamil god mayon மாயோன் என்பவர் யார்? மாயோன் முல்லை நிலத் திணை தெய்வம், மக்களைக் காக்கும் திருமாலாகிய பெருந்தெய்வம். தமிழரது முதல் தெய்வம். தமிழர் தெய்வம் மாயோன். மாயோன் என்பவர் தொல்காப்பியத்தில் முல்லை நிலத்தின் திணை தெய்வமாகக் குறிப்பிடப்படுகிறார். தமிழரின் முதல் தெய்வம் மாயோனே! தொல்காப்பியம் மாயோன் மேய காடு உறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும்        படுமே தொல்காப்பியம் பொருள்.அகத் 5/1 பொருள் - மாயோன் காடுறை உலகமான முல்லை  நிலத் தெய்வம் , குறிஞ்சிக்கு சேயோனாகிய முருகன் தெய்வமாவார், மருத நிலத் தெய்வம் வேந்தன் அதாவது தேவர்களுக்கெல்லாம் வேந்தனான இந்திரன். நெய்தல் நில தெய்வம் வருணன் ஆவார். இவர்களே தமிழரது திணை தெய்வம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே தமிழரின் முதல் தெய்வம் மாயோனே! அதே தொல்காப்பியத்தில் மற்றொரு முறை மாயோன் குறிப்பிடப்படுகிறார். மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ் பூவை நிலையும் தெல்