Posts

Showing posts from August, 2018

சங்கத்தமிழ்_காட்டும்_கிருஷ்ணபக்தி - 53

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 53  "காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" என்று காணும் இடமெல்லாம் கண்ணனைக் கண்டு பாடினான் பாரதி! இம்மரபு தமிழருக்கு எப்போது தோன்றியது? பக்தி இயக்க காலத்திலா? பக்தி இயக்க காலத்தில் இது வளர்ந்தது உண்மை, ஆனால் இதன் மூலம் தமிழின் மிகப் பழைய சங்க இலக்கியங்களில் தான் உள்ளது! அகநானூறு 175 வது பாடல்! 'நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், திருவில்...' அதாவது சூர்ய கதிர்களைப் போன்ற ஒளிமிக்க சக்கரம் (நேமி) உடையவன் திருமால், பகைவர்கள் போர் சிந்தனையையே துறக்கும் அளவிற்கு அச்சம் அடையச் செய்யும் வலிமை மிக்க அவனது மார்பினில் உள்ள மாலையைப் போன்று கார்காலத்தில் தோன்றிய வானவில்லின் நிறம் இருந்ததாம்! வானவில் தோன்றும் இயற்கைக் காட்சியைக் கூட தாம் வணங்கும் இறைவனான திருமாலோடு இணைத்துப் பார்த்த சங்கத்தமிழரது பக்தியை என்னவென்பது?!

சங்கத்தமிழ்_காட்டும்_ஆலய வழிபாடு- 52

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 52 சங்க இலக்கியங்களில் உள்ள சில பாடல்களை மட்டும் படித்துவிட்டுச் சங்கத்தமிழர் நடுகல் வழிபாடு மட்டுமே செய்தனர்! வைதீக மதத்தைப் பின்பற்றவில்லை என்று பலர் பேசத்துவங்கிவிட்டனர்! அதற்குப் பதிலடி சங்க இலக்கியத்திலேயே உண்டு! பெரும்பாணாற்றுப்படை எனும் நூலை உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடியுள்ளார்! இதில் அம்மன்னனைத் திருமால் வழிவந்தவன் என்று காட்டுகிறார்! அவன் ஆண்ட காஞ்சி மாநகரே திருமால் நாபியிலிருந்து தோன்றிய தாமரையின் வடிவம் என்கிறார்! அதே போல திருவெஃகா எனும் திவ்யதேசத்தின் பெருமையைப் பாடுகிறார்! 'நீடு குலைக் காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்' (அடி.371-373) அதாவது காந்தள் மலர் நிறைந்த மலைச்சாரலிலே பெரிய ஆண்யானைப் படுத்திருப்பதைப் போல் திருவெஃகா நகரின் மையத்தில் கோவில் கொண்ட திருமால் ஆயிரம் தலைவிரித்த பாம்பணைமீது பள்ளி கொண்டுள்ளாராம்! அந்நகர மக்கள் திருமாலை பக்திப் பரவசத்தோடு வணங்கிவருவராம்! அங்கு நீயும் சென்று உன் யாழை மீட்டி திருமால் மீது பக்திப் பாடல்கள் பாடி வணங்கிவா என்று

சங்கத்தமிழில் திருமகள் - 51

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் தமிழ் மரபில் திருமகளுக்குச் சிறப்பான இடம் உண்டு! ஸம்ஸ்க்ருதத்தில் 'ஸ்ரீ' என்பது லக்ஷ்மியைக் குறிப்பது போலவே தமிழில் 'திரு' என்பது நீங்காத செல்வம் உடையவளான திருமகளையே குறிக்கும்! தமிழரது பல்வேறு ஊர்ப்பெயர்கள் 'திரு' என்றே தொடங்கும்! இது ஒன்றே திருமகளுக்குத் தமிழர் தந்த பெருமதிப்பிற்கான சான்றுதானே?! சங்க நூல்கள் மஹாலக்ஷ்மியைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றன! திருமாலை வர்ணிக்கும் பல்வேறு இடங்களில் அவன் வல மார்பினில் வடிவாய் விளங்கும் திருமகளை சேர்த்தே போற்றுகின்றனர் சங்கத்தமிழ்ப் புலவர்கள்! அதற்கான உதாரணம் கீழே! வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல - முல்லைப்பாட்டு (2,3) வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்து - பதிற்றுப்பத்து- 31 இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் - பெரும்பாணாற்றுப்படை - 28 திருவின் கணவ! பெரு விறல் மள்ள! - பரிபாடல் 90 சிறந்த கணவன் மனைவிக்கான உதாரணமாக பழந்தமிழர் கொண்டது திருமாலையும் திருமகளையும் தான் போலும்... அதனால் இலக்கியத்திலும் கூட திருமகளை பெரும்பாலும்