Posts

Showing posts from September, 2018

வைதீக வள்ளுவர்

Image
வைதீக வள்ளுவர் திருக்குறளின் பெருமையை விவரிக்க வந்த நூல் திருவள்ளுவ மாலை ஆகும்! இதில் பாரதம் பாடிய பெருந்தேவனார், பரணர்,நல்கூர்வேள்வியார், பொன்முடியார், கபிலர் உள்ளிட்ட புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்துள்ளனர்! இறையனார் சிவபெருமானும் , ஸரஸ்வதி தேவியும் வாழ்த்துவதாக அமைந்துள்ளது! வள்ளுவம் வைதீக நூல் என்பதற்கு இதுவே போதுமான் சாட்சியாக உள்ளது! புலவர்களது பாடல்கள் கருத்து வடிவில்... 🙏 திருமால் சிறிய வாமனராகத் தோன்றி த்ரிவிக்ரமனாக வளர்ந்து தம் இரண்டு அடிகளால் உலகளந்தார் அதேபோல் வள்ளுவர் தம் இரண்டடி குறட்பாக்களால் உலகளந்தார்! 🙏 திருமாலின் புத்ரனும் வேதங்களைக் கொண்டு படைப்பவனுமான ப்ரம்மதேவரே திருவள்ளுவராகத் தோன்றி திருக்குறள் அருளினார்! 🙏 திருமகளது சிறப்பு திருமாலை அடைவது போல் வெண்பாக்களின் சிறப்பு திருக்குறளாகும்! திருக்குறளைக் கற்காதவரிடத்தே திருமகள் விரும்பி அருள் செய்யமாட்டாள்! 🙏 ஏழுகாளைகளை அடக்கி ந ப்பின்னை  பிராட்டியை மணந்த கண்ணன் வடமதுராவுக்கு அச்சாவது போல் தென்மதுரைக்கு வள்ளுவர் அச்சாவார்! அதாவது கண்ணன் கீதையின் சாரத்தை வள்ளுவர் பாடினார் என்று மறைமுக

பெருந்தமிழன் நல்லேன் பெரிது

Image
பெருந்தமிழன்_நல்லேன்_பெரிது ! யார் உண்மையான தமிழர்? யார் பேசுவது உண்மையான  தமிழ்தேசியம் ? யாருடையது தமிழர் சமயம்? பாரத தேசத்தையும், சநாதநதர்மத்தையும் எதிர்க்கும் 'திடீர் தமிழ்தேசியர்' இந்த ஈராயிரம் வருட  தமிழ்தேசியர்களின்  கேள்விக்குப் பதில் தருவீரா? முந்து நூல்  தொல்காப்பியம்  காட்டும் முதல் தெய்வத்தை பெயர் திரிக்காது மாயோன், மாயவன், மாலவன் என்றே பழமை மாறாது பாசுரம் பாடிப் பரவுவோர் யார்? சங்கத் தமிழர் தம் பெருந்தெய்வம்  மாலவனை  பைந்தமிழால் பாடுவதால் 'என்னினும் பெருந்தமிழன் உளரோ' என்று கேட்கும்  பூதத்தாழ்வார்  வழி நிற்போர் யார்? வள்ளுவத்தை  உலகப்பொதுமறை  என்று கூறும் முன்பே பாண்டிய நாட்டுப் பைந்தமிழ்ப் பெண் ஆண்டாள் நாச்சியார் படித்த பாமாலை அறியாதாரை 'வையம் சுமப்பது வம்பு' என்றே பாடி தெய்வத் தமிழ்நூல்  திருப்பாவையை  உலகப் பொதுமறையாகக் கண்டவர் யார்?  தெலுங்கு மன்னரான  கிருஷ்ணதேவராயரையும்  தமிழ்ப் பெண் ஆண்டாள் மீது பக்தி கொண்டு ' ஆமுக்தமால்யதா ' என்று சரிதத்தை தெலுங்கில் எழுத வைத்துத் தமிழ் பெண்மைக்குப் பெருமை சேர்த்தார் யார்? ஆந்திர