Posts

Showing posts from 2025

முதல்வரின் ஓணம் வாழ்த்து - சில கேள்விகள்

Image
 சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயபாரதத்தில் வெளியான எனது கட்டுரை. ஓணத்திற்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வருக்குச் சில கேள்விகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.  கட்டுரையாளர் - விஷ்ணு சர்மா Vishnu Sharma  தலைப்பு - ஹிந்து பண்டிகையும் திராவிட வாழ்த்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போல ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஹிந்து பண்டிகைக்கு இவர் வாழ்த்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் கூடவே நமக்கு இங்கே சில கேள்விகள் எழுகின்றன. 1) வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவரா மாபலி? வாழ்த்தின் இரண்டாவது பத்தியில் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட மன்னர் என்று மகாபலியைக் குறிப்பிடுகிறார் முதல்வர். இதற்கு என்ன ஆதாரம்? மகாபலி சக்கரவர்த்தியைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், அவரை பிரகலாதத்தாழ்வார் என்று அழைக்கப்படுகின்ற பரம வைணவரின் பேரன் என்கின்றன. அவர் இந்திரப் பதவியைக் கேட்டு யாகம் செய்ய அந்தப் பதவியை அடுத்த மன்வந்தரத்தில் தருவதாக வாக்களித்து, குள்ள பிராமண உருவில் வந்த பெருமாள் அவருக்கு பாதாள உலகை ஆளுகின்ற வரத்தை தந்தார். வந்திருப்பவர் திருமால் தான் என்பதை அறிந்தும்கூட, அவருடை...

தமிழரசர் பின்பற்றியது மனு ஸ்ம்ருதியா, திருக்குறளா?

Image
தமிழரசர்கள் மனுஸ்ம்ருத்தி காட்டிய வழியில் நடந்ததாகவே அவர்கள் மெய்க்கீர்த்திகளில் சொல்கிறார்கள். மனுநீதி, மனுநெறி என்பது விஜயநகர காலத்தில் வந்தது அல்ல. காலம் காலமாகத் தமிழர்கள் பின்பற்றியதே ஆகும்.  எந்தத் தமிழரசரும் திருக்குறளைப் பின்பற்றியதாகத் தம் மெய்க்கீர்த்தியில் சொல்லவில்லை‌.  சோழர் மெய்க்கீர்த்தி  1) முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும் உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த சயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ் 2) இராசமகேந்திரன் (கி. பி 1060-1063) ஸ்வஸ்திஸ்ரீ  திருமகள் விளங்க இருநில மடந்தையை ஒருகுடை நிழற்கீழ் இனிதுநிற்பப் புணர்ந்து தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய 3) வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) உரிமை யில்எய்தி யரசு வீற்றிருந்து மேவரு மனுநெறி விளக்கிய கோவிராச கேசரி வனம ரான உடையார் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு யாண்டு 4) குலோத்துங்கன் III. (கி. பி 1178 - 1218 )  ஸ்வஸ்திஸ்ரீ  புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின் செயல்வாய்த்துத்...

மனுவும் குறளும்

Image
 மனுவும் குறளும் மனுஸ்ம்ருத்தி அத்யாயம் 5  தன் சுகத்திற்காக எவன் யாவருக்கும் உபத்திரவஞ் செய்யாத மான் முதலிய ஜந்துக்களுக்கு ஹிம்சை செய்கிறானோ அவன் இம்மையிலும், மறுமையிலும் சுகம் பெறமாட்டான்! இதன் தாக்கம் இக்குறளில் உள்ளது... தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:251) மனு : எவன் எந்த ஜெந்துவையும் கட்டாமல், கொல்லாமல், வருத்தாமலும் உள்ளானோ அவன் சகலஜன மித்ரனாக (அனைத்து உயிர்களுக்கும் நல்லவனாக) சுகங்களும் பெறுவார்! இதன் தாக்கம் குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். மனுஸ்ம்ருத்தி அத்யாயம் 5 நூறு வருஷம் அஸ்வமேத யாகம் செய்தவனும் வாழும் காலம் வரை மாமிசம் உண்ணாதவனும் ஒரே உயர்வான பலனையே அடைவர்!   இதன் தாக்கமே திருக்குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் புலால் உண்ணாமையால் வரும் நன்மை பெரியது!   ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரப் பதவி கிட்டும் என்பது சாஸ்திரம்... அந்த பலனை புலான் மறுத்தல் தரும் என்பதே மனு ஸ்ல...