Posts

Showing posts from March, 2017

சங்கத்தமிழில் சூரசம்ஹாரம்-22

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-22 சனாதனதர்மத்தில் விழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அதிலும் தீமைகளின் உருவகமான அசுரர்களைத் தெய்வங்கள் வென்ற நாட்களும் கொண்டாடப்படுகின்றன. நரகாசுரனை வென்ற நாள் தீபாவளி என்றால் சூரனை முருகன் வென்ற நாள் சூரசம்ஹார விழாவாகும். சூரனை முருகன் வென்ற வரலாறு அகநானூற்றில் 59வது பாடலில் உள்ளது. ..' சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்     சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து...' அதாவது திருபரங்குன்றத்தை 'சூரனை வென்ற முருகன் சினம் தணிந்து எழுந்தருளிய இடமென்று' சங்கநூல் அகநானூறு கூறுகிறது. ஆக, அசுரர்களைத் தமிழர் எனக் கூறுவதே ஏற்புடையதல்ல. மேலும் சனாதனதர்மமானது பாரத தேசம் முழுவதும் ஒன்றுபோலவே பரவி இருந்தது. முருகனைப்பற்றி வடமொழி புராணங்களான 'ஸ்கந்தபுராணம்', 'வாயுபுராணம்' முதலிய புராணங்கள் கூறும். மஹாபாரத வனபர்வத்தில் ஸ்கந்தன் எனும் முருகனின் வரலாறு கூறப்படுகிறது. முருகனின் வரலாற்றை காளிதாசர் வடமொழியில் 'குமாரசம்பவம்' எனும் நூலாக இயற்றினார். குப்தர் காலத்தில் முருக வழிபாடு வட இந்தியாவில் ப்ரபலம். குமாரக

சங்கத்தமிழில் ஹோலிப் பண்டிகை -21

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-21   holi festival in sangam literature   காமன்பண்டிகை_எனும்_ஹோலி     சனாதனதர்மமானது இன்றளவும் பல்வேறு இன்னல்களைக் கடந்து நிற்பதற்குக் காரணம்... சனாதனம் என்பது வாழ்வியல் நெறியாக இருப்பதே ஆகும். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடி, மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாக மாற்றியே சனாதனதர்மம் இன்றளவும் நிலைத்துள்ளது. காமம் என்பதும் காதல் என்பதும் மனித வாழ்வின் முக்கிய அம்சமே ஆகும். தமிழர்கள் இவற்றை கொண்டாடவே செய்தனர். பல்வேறு கோவில்களில் காம சிற்பங்களைக் கடந்தே உள் செல்கிறோம். ஏனெனில் இவற்றைக் கடந்தாலே நாம் வீடுபேறு பெற இயலும். பங்குனி மாத பௌர்ணமி காமன் (மன்மதன்) விழாவாக, பங்குனி முயக்கமாக சங்கத்தமிழன் கொண்டாடினான். அன்றைய காதலர் தினம் அது.  இதனை சோழநாட்டினர் பங்குனி விழாவாகவும் சேரநாட்டினர் உள்ளி விழாவாகவும் கொண்டாடினர் என்பதை “கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே” - (நற்றிணை: 234: 6 - 8) என நற்றிணை சொல்கிறது. உறையூர்ப் பங்குனி விழா ஊ

சங்கத்தமிழில் அருந்ததி -20

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -20 sangathamil kaatum sanathana dharmam. sanathana dharma in sangam literature. THE SCIENTIFIC FACTS ABOUT ARUNTHATHI STAR. அருந்ததி வசிஷ்டர் பார்ப்பதன் அறிவியல் சனாதனதர்மமானது சங்கக்காலத் தமிழரின் வாழ்வியலில் வேரூன்றி, இன்றும் பாரம்பரியம் மாறாமல் எழுந்து நிற்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் இப்பாடல். புறநானூறு-122 பாடியவர்-கபிலர் பாடப்பட்டவர்- மலையமான் திருமுடிக்காரி கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை நினதென விலைநீ பெருமிதத் தையே. பொருள்- திருமுடிக்காரியின் நாடு கடலாலும், பகைவராலும் அழிக்க இயலாதது எனினும் வேள்வித்தீ வளர்க்கும் குற்றமற்ற அந்தணர்க்குத் தரப்பட்டதாகும். தம்முடன் இணைய வேண்டுமென்று மூவேந்தரும் தரும் செல்வங்களோ தம் ஈகைக் குணத்தால் இரவலர்க்குத் தரப்பட்டதாகும். இதைத்தவிர காரிக்கு செல்வம், சொத்து உண்