சங்கத்தமிழில் உலகத் தோற்றம்-19

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-19

உலகின் தோற்றமும் ஒடுக்கமும் பற்றிய விஞ்ஞானப் பார்வை மெய்ஞ்ஞானத்தின் வடிவில்.

Bigbang theory illustrated in Tamil sangam literature- paripadal

பாடல்:-

தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும்

மாசில்ஆ யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்

ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு 

கேழாய் மருப்பின் உழுதோய் எனவும்

மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச்

சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் எனுவும்

ஞாலத்து உரையுந் தேவரும் வானத்து

நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர்

பாடும் வகையே எம்பாடல் தாமப்

பாடுவார் பாடும் வகை!

பரிபாடல் 25-30.

பொருள்:-

இந்த அண்டமானது அழியும் #ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கும் பெருநெருப்பாக இருப்பவனே, திருமாலே, ஆயிரம் கதிருடைய சூரியனும் நீயே, உயிர்களுக்கு விதியாக இருப்பவனே! 

இவ்வுழிக்கால்ததில் பூமியைப் பன்றி (வராஹ அவதாரம் ) உருவெடுத்து வெள்ளத்திலிருந்து மீட்டவனே!! பெருமழையால் ஆழி சூழ்ந்த உலகை அன்னப்பறவையின் உருவெடுத்து சிறகால் காத்தவனே! நின்னை அனைத்து தேவாதி தேவர்களும் தொழுது வணங்குகின்றனர்.அடியனும் உன்னை அவ்வாறே வணங்குகிறேன்.



 

நாம் அறிந்து கொள்வது-

இன்று விஞ்ஞானிகளால் பிரபஞ்சத் தோற்றம் குறித்து பெரிதும் ஏற்கப்பட்டுள்ளது பிரபஞ்சப் #பெருவெடிப்புக் கோட்பாடு (The bigbang theory) ஆகும். அதன்படி ஆதியில் மிகுந்த வெப்பமும், அடர்த்தியும் உடைய முட்டை (அல்லது புள்ளி) இருந்தது. அதுவே வெடித்துச் சிதறி பிரபஞ்சமாக மாறியது. காலமும்(time), வெளி  (space) அதிகரிக்க அதிகரிக்க குளிர்ந்து நட்சத்திர மண்டலங்களும் தோன்றின. பின் அதே போல் விரிந்த பிரபஞ்சம் சுருங்கி ஒரு புள்ளியாக மாறும்.இதுவே இக்கோட்பாட்டின் சாரம்சம். நமது பூமியானது இந்த வெள்ளத்திலிருந்து பிரிந்து உருவானது தான். ஆரம்பத்தில் நீரால் சூழப்பட்டிருந்த பூமி நீர் வற்றியவுடன் உயிர்கள் தோன்றும் இடமானது.



இதையே நமது தமிழரின் மெய்ஞ்ஞானத்தில் அழகாக கவித்துவமாக விளக்கியுள்ளனர்.

அதாவது இந்த பிரபஞ்சம் உள்வாங்கப்பட்டு நெருப்பினால் அழிந்து ஒடுங்குமாம், அந்த நெருப்பாக இருப்பவன் நாராயணன் ஆவார்.

பின் உலகைத் தன்னிலிருந்து விரியச் செய்பவரும் அவரே தான். இங்கே பிரபஞ்சமானது இறுதியில் நெருப்பு முட்டை போல் ஆகும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. இந்த முட்டையே ஹிரண்யகர்ப்பம் (hiranyagarbha) எனப்படும். இந்த பூமியும் விடாது பெய்த பிரபஞ்ச மழை (cosmic shower) அதாவது பெருவெடிப்பு நிகழும் போது நெருப்புக் கோளங்கள் மழைபோல் பெய்யும். அம்மழையால் நெருப்புக் கோளங்களும், உருவாகாத நக்ஷத்ரங்களும், வாயுக்களும் கடல்போல் காட்சித் தரும். அக்கடலிருந்து ஸ்ரீமஹாவிஷ்ணு வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார். நெருப்புக் கோளாமாக இருந்த பூமி குளிர்ந்து பெருமழை பெய்தது. அதனால் கடல் மட்டுமே நிலத்தைச் சூழ்ந்திருந்தது. அத்தகைய கடலை அன்னப்பறவையின் வடிவெடுத்து திருமாலே வற்றச் செய்து நிலத்தை மீட்டார். 



இப்பாடலைக் கவனித்துப் படித்தால் பிரபஞ்ச்ததின் ஒடுக்கத்தில் தொடங்கி, பூமியின் தோற்றம் வரையிலான தெளிவான விஞ்ஞானம் பார்வை நம்முன்னோரிடம் இருந்ததைக் காணலாம்



Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்