Posts

Showing posts from 2020

அவதாரம் என்பதை விளக்கும் சங்கப்பாடல்!

Image
அவதாரம் என்பதை விளக்கும் சங்கப்பாடல்! பிறப்பவன் இறைவனா? நம்மிடம் பொதுவாகச் சிலர் கேட்கும் கேள்வி மனிதர்கள் தானே கர்மவினையைத் தீர்க்கப் பிறக்கிறோம்... பகவான் ஏன் ராமர் கிருஷ்ணர் என்று பிறக்கிறார்? மனிதனைப் போல் பிறப்பவன் எப்படிக் கடவுளாவான்? அதாவது அவதாரம் என்ற வைதீக சநாதந தர்மக் கோட்பாடு புரியாதவரே இவ்வாறு கேட்கின்றனர்! அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்ற சங்கதச் சொல்லிற்குக் கீழ் இறங்கி வருதல் என்று பொருள்! நமது சநாதந தர்மத்தில் பரம்பொருளான திருமால் எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் அவதாரம் செய்து பக்தர்களைக் காப்பேன் என்று கீதையில் கூறுகிறார்! அதன்படியே அவதாரமும் செய்கிறார்! இதை விளக்க வேதமந்திரம் தேவையில்லை...சங்கப்பாடலே போதும்! முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே (பரிபாடல் 3, வரிகள் :71-72)  அதாவது படைத்தல்,காத்தல்,அழித்தல் எனும் மூன்று தொழிலும் புரிகின்ற பரம்பொருளாகிய திருமால் மீன், ஆமை, வராஹம் என்று எடுக்காத அவதாரமே (பிறப்பே) இல்லை ஆனால் அவனைப் பிறப்பித்தவர் இல்லை! அதாவது கர்மாவினால் கட்டுண்டு அத

கற்போம் கம்பரை

Image
          கம்பர் சைவரா வைணவரா என்று சர்ச்சையால் விளைந்த நன்மையை என்னவென்பது? இதுவரை ஆழமாகக் கம்பரைக் கல்லாத அடியேன் ராமாவதாரம் படித்து உருகுகிறேன்! முத்தையா என்ற நாத்திகன் கம்பரைக் கிண்டல் செய்ய எண்ணி ராமாயணம் படிக்க கம்பனால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணதாசன் ஆனான் என்பது சுயசரிதை!  அதைப் போல் கற்பவரைக் கசிந்துருகச் செய்யும் கவி ஆற்றல் கம்பனுடையது! தமிழ்த்தாயே இறைவனிடம் தவமிருந்து பெற்ற பிள்ளை கம்பன்! அதனால் தான் "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். மனத்தில் ராமபக்தியை விதைக்கும் இந்நூலை கவித்திறனுக்காக மட்டுமே போற்றுவது ஏற்கத்தக்கதல்ல! கம்பராமாயணத்தின் உடல் செந்தமிழ் என்றால் அதன் உயிர் 'ராமபக்தி' ஆகவே 'கற்போம் கம்பனை' என்ற தலைப்பில் கம்பன் வழியாக தமிழைச் சுவைப்பதோடு முக்கியமாக ராமரசத்தைச் சுவைப்போம்! தமிழ் மிகப் பெரிய இலக்கியமாக விளங்குவது கம்பர் பெருமான் இயற்றிய ராமாயணமே ஆகும்! ஆனால் அவர் இட்ட பெயரோ 'ராமாவதாரம்' பெயரிலிருந்தே தொடங்குவோம்! ராமாவதாரம் நிகழக் காரணம் என்ன?  இதோ கம்பரே சொல்

மாயோன் கிருஷ்ணரா? விஷ்ணுவா? 

Image
மாயோன் கிருஷ்ணரா? விஷ்ணுவா?  மாயோன்! இந்த ஒற்றைச் சொல் அத்தனை இந்து விரோத பிரிவினைவாத, திராவிட இதர மிஷனரி கும்பல்களையும் அலற வைக்கின்றது! காரணம் அது தமிழ் இலக்கிய உலகில் நீண்ட தொடர்ச்சியை உடையது மட்டுமன்றி எளிய மக்களின் பயன்பாட்டிலும் கிருஷ்ணன்/விஷ்ணுவைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது! இலக்கியங்களில் இச்சொல் விஷ்ணுவைக் குறிக்கிறதா அல்லது கிருஷ்ணரைக் குறிக்கிறதா என்ற குழப்பம் பல இடங்களில் வருகின்றது!  ஒரு வகையில் இக்குழப்பம் நல்லது! மாயோன் என்பவர் இருவருமே அல்ல என்று கூற எந்த இலக்கியத்தில் ஆதாரமில்லை! அதனால் புதுக்குழப்பம் செய்வோர் உண்டு...ஆனால் அதற்கும் வழியில்லை! அதாவது பெருமாள் தான் தமிழர் சாமி வடமதுராவில் பிறந்து குஜராத் துவாரகையை ஆண்ட கிருஷ்ணர் ஆர்ய தெய்வம் என்று கூறினால் கலித்தொகை, புறநானூறு ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மாயோன் கிருஷ்ணனன்றி வேறு யார் என்ற கேள்வி வரும்! ஒரு வேளை மாயோன் முல்லை தெய்வம் கிருஷ்ணன் தான்... விஷ்ணு என்பவரை ஆர்யர் தூக்கிக்கொண்டு வந்தனர் என்றால் பரிபாடல், கம்பராமாயணம், மணிமேகலை கூறும் மாயோன் விஷ்ணு அன்றி வேறு யாரென்று கூறவேண்டும்!  ஆக எந்தப் பக்க

திருவேங்கடத்தின் சிறப்பு 

Image
திருவேங்கடத்தின் சிறப்பு உலகிலேயே மிக அதிகமான பக்தர்கள் தரிசிக்க வரும் கோவிலாகவும், மிகப் பணக்காரக் கோவிலாகவும் விளங்குவது திருப்பதி வெங்கடேஷ்வரர் கோவிலாகும்! இக்கோவிலானது இவ்வளவு பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இதன் பழமையே ஆகும்! தமிழ் மொழிக்கு இலக்கணம் தோன்றிய காலத்திலிருந்து இக்கோவில் உள்ளது! ஆம்... தமிழில் நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்” என்று வருமிடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும், "நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை” என்று விளக்கியுள்ளார். இங்கு திருமால் வாமன அவதாரத்தில் மஹாபலியிடம் சென்று உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை “நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்” எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்....சங்க இலக்கியங்களிலும் வேங்கடம் குறிப்பிடப்படுகின்றது! திருமலையை 'நெடியோன் குன்றம்' என்று கூறும் சிலப்பதிகாரம் அங்கு கோவில் கொண்டுள்ள திருமாலை அழகாக வர்ணித்து அக்கோவிலுக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே பக்