Posts

முதல்வரின் ஓணம் வாழ்த்து - சில கேள்விகள்

Image
 சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயபாரதத்தில் வெளியான எனது கட்டுரை. ஓணத்திற்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வருக்குச் சில கேள்விகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.  கட்டுரையாளர் - விஷ்ணு சர்மா Vishnu Sharma  தலைப்பு - ஹிந்து பண்டிகையும் திராவிட வாழ்த்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போல ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஹிந்து பண்டிகைக்கு இவர் வாழ்த்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் கூடவே நமக்கு இங்கே சில கேள்விகள் எழுகின்றன. 1) வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவரா மாபலி? வாழ்த்தின் இரண்டாவது பத்தியில் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட மன்னர் என்று மகாபலியைக் குறிப்பிடுகிறார் முதல்வர். இதற்கு என்ன ஆதாரம்? மகாபலி சக்கரவர்த்தியைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், அவரை பிரகலாதத்தாழ்வார் என்று அழைக்கப்படுகின்ற பரம வைணவரின் பேரன் என்கின்றன. அவர் இந்திரப் பதவியைக் கேட்டு யாகம் செய்ய அந்தப் பதவியை அடுத்த மன்வந்தரத்தில் தருவதாக வாக்களித்து, குள்ள பிராமண உருவில் வந்த பெருமாள் அவருக்கு பாதாள உலகை ஆளுகின்ற வரத்தை தந்தார். வந்திருப்பவர் திருமால் தான் என்பதை அறிந்தும்கூட, அவருடை...

தமிழரசர் பின்பற்றியது மனு ஸ்ம்ருதியா, திருக்குறளா?

Image
தமிழரசர்கள் மனுஸ்ம்ருத்தி காட்டிய வழியில் நடந்ததாகவே அவர்கள் மெய்க்கீர்த்திகளில் சொல்கிறார்கள். மனுநீதி, மனுநெறி என்பது விஜயநகர காலத்தில் வந்தது அல்ல. காலம் காலமாகத் தமிழர்கள் பின்பற்றியதே ஆகும்.  எந்தத் தமிழரசரும் திருக்குறளைப் பின்பற்றியதாகத் தம் மெய்க்கீர்த்தியில் சொல்லவில்லை‌.  சோழர் மெய்க்கீர்த்தி  1) முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும் உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த சயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ் 2) இராசமகேந்திரன் (கி. பி 1060-1063) ஸ்வஸ்திஸ்ரீ  திருமகள் விளங்க இருநில மடந்தையை ஒருகுடை நிழற்கீழ் இனிதுநிற்பப் புணர்ந்து தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய 3) வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) உரிமை யில்எய்தி யரசு வீற்றிருந்து மேவரு மனுநெறி விளக்கிய கோவிராச கேசரி வனம ரான உடையார் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு யாண்டு 4) குலோத்துங்கன் III. (கி. பி 1178 - 1218 )  ஸ்வஸ்திஸ்ரீ  புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின் செயல்வாய்த்துத்...

மனுவும் குறளும்

Image
 மனுவும் குறளும் மனுஸ்ம்ருத்தி அத்யாயம் 5  தன் சுகத்திற்காக எவன் யாவருக்கும் உபத்திரவஞ் செய்யாத மான் முதலிய ஜந்துக்களுக்கு ஹிம்சை செய்கிறானோ அவன் இம்மையிலும், மறுமையிலும் சுகம் பெறமாட்டான்! இதன் தாக்கம் இக்குறளில் உள்ளது... தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:251) மனு : எவன் எந்த ஜெந்துவையும் கட்டாமல், கொல்லாமல், வருத்தாமலும் உள்ளானோ அவன் சகலஜன மித்ரனாக (அனைத்து உயிர்களுக்கும் நல்லவனாக) சுகங்களும் பெறுவார்! இதன் தாக்கம் குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். மனுஸ்ம்ருத்தி அத்யாயம் 5 நூறு வருஷம் அஸ்வமேத யாகம் செய்தவனும் வாழும் காலம் வரை மாமிசம் உண்ணாதவனும் ஒரே உயர்வான பலனையே அடைவர்!   இதன் தாக்கமே திருக்குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் புலால் உண்ணாமையால் வரும் நன்மை பெரியது!   ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரப் பதவி கிட்டும் என்பது சாஸ்திரம்... அந்த பலனை புலான் மறுத்தல் தரும் என்பதே மனு ஸ்ல...

கழகம் தமிழ்ச் சொல்லா?

Image
 கழகம் தமிழ்ச் சொல்லா? சங்கம் என்பது வடமொழிச் சொல் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்ட அதே பொருளுடைய கழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சொல்லின் மூலம் ஆய்வுக்குறியது. இது பற்றி தமிழ் ஆய்வாளர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இக்கட்டுரையை அவரது தொகுப்பு நூலான தமிழின் மறுமலர்ச்சி நூலில் படிக்க நேர்ந்தது.  பொதுவாக ழகரம் வந்தாலோ, அல்லது நீண்ட காலமாகத் தமிழில் படன்படுத்தப்பட்டு வந்தாலோ அதைத் தமிழ்ச் சொல் என்றே முடிவு கட்டி விடுகிறோம். ஆனால் அது சரியானதல்ல என்று சொல்வது போல் இக்கட்டுரை அமைந்துள்ளது.  கட்டுரை  // கழகம் இக்காலத்தே கல்வியோடு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கழகம் வழங்குகிறது. இச்சொல் திருக்குறளில், கவறுங் கழகமுங் கையுந் தருக்கி இவறியார் இல்லாகி யார். (935) என வந்துள்ளது. 'கழகமாக ஏகவின்பக் காமக் கவறாடல் இயைவதன்றே' எனச் சிந்தாமணியில் (1657) உள்ளது. ஓதுசாலையும் சூதாடு கழகமும், என்பது பெருங்கதை (II, 7,132). தவலில்தண் கழகத்துத்  தவிராது வட்டிப்பக்  கவறுற்ற வடுவேய்க்குங்  காமர்பூங் கடற்சேர்ப்ப, எனக் கலித்தொ கையில் (13...

ஆரிய பார்ப்பனியத்தை எதிர்த்த சங்ககால அரசர்கள்!

Image
சங்க கால தமிழரசர்களின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு!  தங்கள் வம்சாவளியைச் சார்ந்த பிற்கால அரசர்களைப் போல் சங்ககால சேர, சோழ, பாண்டியர்கள் பிராமணரை மதிக்கவில்லை... அநியாயமாகக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள்... என்னென்ன கொடுமை என்று வரிசையாகப் பார்ப்போம். 1) பார்ப்பனர் நோக எதையும் செய்யாதவன் சோழன். புறநானூறு 43 வரி 3 -15 பாடியவர் - தாமப்பல் கண்ணனார் பாடப்பட்டவன் - சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பாடல்  கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ  தன் அகம் புக்க குறு நடை புறவின் தபுதி அஞ்சி சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக நேரார் கடந்த முரண் மிகு திருவின் தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல்  கொடு மர மறவர் பெரும கடு மான் கைவண் தோன்றல் ஐயம் உடையேன் ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி. பொருள் - பருந்திடமிருந்து புறாவைக் காக்கத் தன் சதையைத் தந்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபினனே சோழனாகிய நீ. உன் முன்னோர் பார்ப்பனர் நோக எதையும் செய்ய மாட்டார்கள். 2) நால்வேதமும் வல்ல பிராமணரை பாண்டியன் பணிந்து தலை வணங்கினான். இறைஞ்சுக பெருமந...

தமிழரின் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டா?

Image
சோபகிருது வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் சரியானதா? சாமானியமாக தமிழ் புத்தாண்டு என்று கூறினாலும் கூட உண்மையில் இப்புத்தாண்டை சூரியப் புத்தாண்டு அல்லது சௌரமான புத்தாண்டு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் மொழிக்கு ஒரு புத்தாண்டு என்பது என்றுமே இருந்ததில்லை.  உதாரணமாக நாம் ஆங்கில புத்தாண்டு என்று கூறினாலும் கூட அது ஆங்கிலேயர்களால் மட்டும் இன்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை பேசுகின்ற கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவம் பரவிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட காலனிய பகுதிகளிலும் இப்புத்தாண்டு வரவேற்பைப் பெற்று இன்று உலகின் புத்தாண்டு என்ற நிலையை எழுதி விட்டது. என்றாலும் இதனுடைய தோற்றுவாய் என்று பார்த்தோமேயானால், கிரகேரியன் என்கின்ற பாதிரியாரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இது கிரிகேரியன் புத்தாண்டு என்று அறியப்படுகிறது. அடுத்ததாக தெலுங்கு புத்தாண்டு என்று அறியப்பட்டாலும் கூட யுகாதி தெலுங்கு மக்களுக்கு மட்டுமல்லாமல் ...

தெலுங்கு தமிழர் உறவு

Image
 இசுலாமிய படையெடுப்புகளிலிருந்து தென்னிந்தியாவை அரணாகக் காத்தது விஜயநகர சாம்ராஜ்யம். அதன் ஒப்பற்ற அரசர் கிருஷ்ண தேவராயர். அவர் தெலுங்கு, சம்ஸ்க்ருதம் மட்டுமன்றி தமிழ் மொழியையும் ஆதரித்துள்ளார். அவரைப் போற்றி மண்டல புருஷர் எனும் ஜைனர் தமிழ்ப்பாடல் இயற்றியுள்ளார்‌ (படத்தில் உள்ளது). அதே போல அரிதாசர் என்ற புலவர் இருசமய விளக்கம் என்ற நூலில் கிருஷ்ண தேவராயரைப் புகழ்ந்து பாடியுள்ளார் (படத்தைக் காண்க).