Posts

Showing posts from May, 2017

சங்கத்தமிழ்_காட்டும்_வீரஸ்வர்கம் - 45

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 45 வீரசுவர்கம் குறித்த நம்பிக்கைகள் இந்துக்களிடையே மிகுந்த வலிமை வாய்ந்தவை, போரில் வீரமரணம் அடையும் வீரன் வீரசுவர்கம் அடைவான் என்று பண்டைய தமிழ் மக்களும் நம்பினர். வட இந்தியர்களிடமும் இதே நம்பிக்கை உள்ளது. புறநானூறு 93 வரி 7-11 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என வாழ்க போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ அதியமானது பெருமையைப் பாட வந்த ஔவையார் ' உன்னிடம் தோற்ற ஓடிய பகைவர்கள், போரில் இறக்காமல் பெருமை இழந்தனர் அதை ஈடுகட்ட அவர்கள் இறந்த பின் அறம்செய்கின்ற நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள், பசும்புல்லான தர்பையைப் பரப்பி, அதன் மீது அவர்களது (போரில் வீரமரணம் அடையாதவரது) உடலை வைத்து, வாளால் மார்பை வெட்டி, 'கழல் அணிந்த வீரமரணம் அடைந்த மறவர்கள் சென்ற வீரசுவர்கத்திற்கே நீயும் செல்வாயாக என்று வாழ்த்துவர். அத்தகைய இழி நிலை உனக்கில்லை, உன்னைப் பகைத்தவர்களுக்கு ஏற்பட்டது என்கிறார். ஆகவே, பாரத தேசம் முழுவதும் ஒரே மாதிரியான வீரசுவர்கம் குறித்த நம

சங்கத்தமிழ்_காட்டும்_அந்தணர் - 44

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 44 பதிற்றுப்பத்து பாடல் எண் 24 வரி 6-9 ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞாலம் நின்வழி யொழுகப் பாடல்சான்று அதாவது வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், பிறரை வேதம் ஓதச் செய்தல், வேள்வி செய்ய வைத்தல், பிறர்க்கு ஈதல், தகுதியுடையோரிடம் தானம் பெறுதல் ஆகியவை அந்தணர்களுக்குரிய அறங்களாகும். இவற்றைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் காட்டிய வழியில் செல்பவன், அவர்கள் கூறுவதை வழிமொழிந்து ஆண்டவன் சேரமன்னன், அவனது ஆணையை ஏற்று தான்  உலகமே நடக்கிறது என்று புலவர் போற்றுகிறார். ஆகவே, சங்கத்தமிழ் மக்களிடையே மன்னனே உயர்நிலை பெற்றவனாயினும், அவன் அறவழியில் செல்ல துணை நிற்க வேண்டியது அந்தணர்களே, இதுவே பிற்காலத்தில் 'வர்ணாஸ்ரம தர்மம்' என்ற பெயர் பெற்றது. ராஜகுரு என்பவரே அரசனுக்கு வழிகாட்டினார், அதனால் தான் அரசனும் தர்மத்தின் வழி நின்றான், மக்களும் இன்புற்று வாழ்ந்தனர். 

சங்கத்தமிழில் ஜோதிஷம் - 43

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 43 இன்றும் எந்த விஷயங்களையும் நாள், கோள் பார்த்துச் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். கிரக நிலை வைத்து இவ்வருடம் மழை எப்படி இருக்கும் என்று  இந்நாட்களில் கணிக்கிறோம்.  இது பண்டைய சங்கத்தமிழ் மக்களிடையே இருந்ததா? பார்ப்போம். பதிற்றுப்பத்து பாடல் எண் 13 வரி 25,26 அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழை வேண்டு புலத்து மாரிநிற்ப சேர நாட்டின் மழை வளமானது சேரமன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக இருந்தது என்பதைப் புலவர், வெள்ளி கிரகத்தோடு அழல் (செவ்வாய்) கிரகம் சேராமல் வேண்டிய இடங்களில் எல்லாம் மழை பெய்தது என்று கூறியுள்ளார். அதாவது சுக்கிரன் மழை தரும் கோள் ஆனால் அதனோடு செவ்வாய் கிரகம் ஒரே ராசியில்  சேர்ந்தால் மழை கெட்டுவிடும் - பெய்யாது. ஆனால் சேரமன்னனின் நல்லாட்சியில் அவ்வாறு நடக்கவில்லை, வேண்டிய இடத்தில் எல்லாம் நல்ல மழை பெய்தது என்று புலவர் தெளிவாக விளக்குகிறார். இவ்வளவு நுட்பமாக கோள் நிலையை ஆராய்ந்து, அதைப் பின்பற்றினர் சனாதனதர்மம் ஏற்றிருந்த சங்கத்தமிழ் மக்கள். ஆகவே, ஜோதிஷ சாஸ்திரம் என்பது வெறும் மூட நம்பிக்கை என்றோ, ஆரிய புரட்டு என்றோ கூற

சங்கத்தமிழில் சிபிச்சக்ரவர்த்தி - 42

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 42 சோழ மன்னர்கள் யாருடைய மரபினர்? புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! இப்பாடலில் புலவர் சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது. இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான  தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்சி தந

சங்கத்தமிழ்_காட்டும்_முருகவழிபாடு - 41

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 41 சங்கக்காலத்தில் முருக வழிபாடு பற்றிக் காண்போம் திருமுருகாற்றுப்படை பாடல் வரிகள் 181-189 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று ஏரகம் எனும் படை வீட்டில் உறையும் முருகப்பெருமானை 'மூன்று வகையான தீயை - யாகம் வளர்ப்போரும், ஒன்பது நூலை மூன்றாக்கி முப்புரி நூலணிந்த, இரு பிறப்பாளர்களாகிய அந்தணர்கள், ஈரம் உலரா ஆடையுடன், தலை மீது கைக்கூப்பி, ஆறெழுத்து மந்திரமான' சரவண பவ 'என்பதன் பொருளடங்கிய வேதங்களைப் பாடி, நறுமணம் மிக்க மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பர்.  இப்பாடல் மூலம் யாகம் செய்யும், பூணூல் அணியும் ப்ராமணர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்ததையும், சரவண பவ என்று மந்திரங்களைச் சொல்லி முருகப்பெருமானை வணங்கினர் என்பதையும் அறியமுடி

சங்கத்தமிழ்_த்ரிபுரசம்ஹாரம் - 40

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 40 புறநானூறு பாடல் எண்- 55, வரிகள் (1-5) ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி  பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த  கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்  பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல சங்கக்காலத் தமிழரிடம் புராணக் கதைகள் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தன. பாண்டியன் நன்மாறனை இவ்வாறு போற்றுகிறார் புலவர்  ' மலையை (மேரு மலையை) வில்லாகவும், பாம்பை (வாசுகிப் பாம்பை) நாணாகவும் ஒரே கணையைக் கொண்டு மூன்று கோட்டை அசுரர்களையும், வீழ்த்தி தேவர்களுக்கு வெற்றியைத் தந்தவனும்,  நீலக் கறையுடைய கழுத்து உடையவனுமான சிவபெருமானின் பிறை போன்ற அழகிய நெற்றியிலிருக்கும் கண்ணைப் போன்ற சிறப்பு வாய்ந்தவன் என்கிறார். இதிலிருந்து பண்டைய தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் செல்வாக்கு பெற்றிருந்ததை அறிய முடிகிறது. 

சங்கத்தமிழ்_காட்டும்_சிவவழிபாடு - 39

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 39 சங்கக்காலத் தமிழர் சிவபெருமானைப் போற்றினர். முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. புறநானூறு பாடல் எண்-91 வரிகள் (5-7) பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே இப்பாடல் ஔவையார் அதியமானைப் போற்றிப் பாடியது . பால் போன்ற வெண்ணிறம் உடைய பிறையினைச் சூடியவனும் , பிறையினைப் போன்ற நெற்றி உடையவனும் , நீல நிற கழுத்தை உடையவனுமான சிவபெருமானைப் போல் உன் புகழும் நிலைபெறட்டும் என்று அதியமானைப் போற்றி ஔவையார் பாடியது. இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் சிவபெருமானை இன்று நாம் வணங்கும் உருவில் தான் சங்கத்தமிழரும் வணங்கினர், இடையே வந்த ஆரியப் புரட்டு என்று எதுவுமில்லை.

சங்கத்தமிழில் கிருஷ்ண பலராமன் -38

Image
சங்கத்தமிழ்_காட்டும் _சனாதனதர்மம் -38 புறநானூறு பாடல் 58 வரிகள் 14-16 பால்நிற உருவின் பனைக்கொடி யோனும், நீல்நிற உருவின் நேமியோனும், என்று இருபெருந் தெய்வமும் உடன்நின் றாஅங்கு , சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் அருகருகே அமர்ந்திருந்த கோலத்தைக் கண்ட புலவர்  'பால் போன்ற வெண்ணிறம் உடைய பலராமனும் நீலநிறம் உடைய கிருஷ்ணாவும் அருகருகே அமர்ந்து இருப்பது போல உள்ளது என்கிறார் . இதிலிருந்து  நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் பலராமனும் , கண்ணனும் தமிழரின் ஆதி தெய்வங்கள், திருமாலின் அவதாரங்களான இருவரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பெருந்தெய்வங்களாகவே இருந்துள்ளனர். 

சங்கத்தமிழில் மாலும் மன்னவனும்-37

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-37 புறநானூறு பாடல் 57 வரிகள் 1-3 "வல்லார் ஆயினும் , வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற" அதாவது வலிமை உடையவர், வலிமை இல்லாதவர் என்று பேதம் பார்க்காது தன்னைப் புகழ்ந்தோர் அனைவரையும் ஆதரித்துப் காப்பவன் பாண்டியன் நன்மாறன் ஆவான். அவனது இத்தகைய குணம் தன் பக்தர்களிடம் எவ்வித வேற்றுமையும் காட்டாமல், தன்னை நம்பினோரைக் காக்கின்ற திருமாலின் குணத்தை ஒத்ததாய் உள்ளது என்கிறார் புலவர். அதாவது இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமம். பக்தன் பாமரனா , பண்டிதனா , செல்வந்தனா , வறியவனா என்று பகவான் பார்ப்பது இல்லை. அதற்குச் சிறந்த உதாரணம் இன்றும்  இவ்வளவு செல்வம் குவியும் திருப்பதியில் எம்பெருமானுக்கு மரபுப்படி மண்சட்டியில் வைத்த தயிர்சாதமே முக்கிய நைவேத்யம் ஆகும். இதன்மூலம் சங்கத்தமிழரது கடவுட் கொள்கை இன்றுள்ளது போன்றே அன்றும் இருந்தது என்று துணிந்து கூறலாம். 

சங்கத்தமிழ்_காட்டும்_கிருஷ்ணலீலா - 36

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -36 சங்க இலக்கியத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகள் ப அகநானூறு பாடல் 59 வரிகள் (4-6) வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த "மாஅல்" போல, இப்பாடலில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியை ஆறுதல் படுத்துகிறாள் தோழி. இங்கே உவமை கூற வரும் இடத்தில் கண்ணனின் லீலையை விளக்குகிறாள். கண்ணன் யமுனை நதிக்கரையில் கோபிகைகளின் ஆடைகளை மறைத்து வைக்கிறான். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்க ஆடைகளை தருகிறான். கண்ணனது லீலைகள் அக்காலத்திலேயே தமிழகம் வரை பரவிய இருந்தன என்பதற்கு இதுவே சான்று.  இந்த நிகழ்வு உண்மையில் மறைபொருளை உடையதாகும். இங்கே கண்ணன் பரமாத்மா, கோபிகைகள் பரமாத்மாவின் ஒரு துளியாகிய ஜீவாத்மா ஆனால்    அந்த ஜீவாத்மாக்கள் பாசம், பந்தம் லௌகிக இன்பங்களைத் தன் ஆடையாக தரித்துள்ளது. அதை பரமாத்மா தன் அருளால் நீக்க முற்படுகிறது. ஆனால் ஜீவாத்மா லௌகிக இன்பங்களில் திளைத்து அவற்றிலிருந்து விடுபட விரும்பாது தன் மாய ஆடையை கேட்கிறது (கோபிகைகள் உடையைக் கேட்டது போல்). இந்த போலி ஆடையைத் தூக்கி எறியாதவரை ஜீவன் முக்தி அடைவத

சங்கத்தமிழ்_காட்டும்_புராணச்செய்தி - 35

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 35 சங்கக்காலத் தமிழ் மக்களிடம் மிகுதியாக புராணக் கதைகள் வழங்கி வரப்பெற்றன. அவ்வப்போது புலவர்களின் உவமைகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டன. பின்வரும் பாடலில் வரும் புராண உவமை சம்ஸ்கிருத ஸ்ரீமத் பாகவத புராணத்திலேயே காணப்படாத அரிய தகவலாகும். இதன்மூலம் தமிழர்கள் புராணங்களை ஆதரித்தனர் என்ற உண்மை புலப்படும் புறநானூறு பாடல் 174 வரிகள் (1-5) அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பை கொள் பருவரல் தீர கடுந்திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு. திருக்கண்ணன் எனும் சோழ அரசன் சோழ மரபை மீட்டெடுத்த செய்தியைப் பாடவந்த புலவர் அவனை திருமாலோடு ஒப்பிடுகிறார். அன்றொரு நாள் தேவாசுர யுத்தம் வரவே, இரவும் பகலும் அவர்கட்கு இடையூறுசெய்யவே, அசுரர்கள் ஞாயிற்றை மறைத்து வைத்தனர், உயிர்கள் துன்புற்றன. அதனால், காக்கும் கடவுளான நாராயணன் அசுரரை அழித்து ஞாயிற்றை மீட்டெடுத்து நிறுவினார். அதைப் போல இருண்ட காலத்தில் சோழ மரபை மீட்டெடுத்தவன் திருக்கண்ணன் ஆவான்.

சங்கத்தமிழ்_காட்டும்_காதல் தெய்வம்- 34

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 34 சங்கத்தமிழரின் காதல் கடவுள் யார்? இதோ விடை கலித்தொகை - பாடல் எண் 108 இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி; மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன், சூள். பொருள் தன் காதலியைப் பார்த்துக் காதலன் சொல்கிறான், "அழகிய என் காதலியே உனக்கு இணையான பெண் இன்னொருத்தி எனக்கில்லை, உன்னையே நான் காதலிக்கிறேன், நீ வருந்தாதே, இது உண்மை என்பதை 'மலைபோன்ற உறுதியான அழகிய மார்பினை உடைய திருமாலின் திருவடிகளை தலையில் வைத்து, இருகைகளால் தொட்டு சூளுரைக்கிறேன் என்கிறான். நாம்   அறிந்துகொள்வது யாதெனின் சூளுரைத்து உறுதி செய்வது என்பது இன்றளவும் இந்துக்களிடையே காணப்படும் பண்பாகும், இன்றளவும் கிராமங்களில் இறைவன் மீது உண்மையாக என்று சூளுரைத்து நிரூபித்தல்  நடைமுறையில் உண்டு. இது அக்காலத்திலிருந்தே இருந்த வழக்கமாகும். இங்கு தலைவன் திருமால் மீது சூளுரைக்கிறான்.திருமாலே அன்று முதல் இன்றுவரை பாரத தேசத்து மக்களுக்குக் காதல் தெய்வமாக இருக்கிறான். காதல் என்றவுடன் நினைவுக்கு வருவது 'ராதா கிருஷ்ணன

சங்கத்தமிழில் ஏறுதழுவுதல் -33

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-33 சங்கத்தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் வழங்கப்பட்டுவந்தனவா? பார்ப்போம் கலித்தொகை -103 வது பாடலில் வரும் வரிகள் மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல் மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு! இந்த பாடல் ஏறுதழுவும் வீரனை வர்ணிக்கின்றது. தோழியானவள் தலைவியிடம் இளம் காளையினை தழுவுகின்ற உன் நாயகனைப் பார். அன்றொரு நாள் கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' எனும் குதிரை வடிவில் வந்த அசுரனை வாய் பிழந்து கொன்றழித்த கண்ணன் கூட இவ்வாறு தான் வீரத்தை வெளிப்படுத்தினானோ? என்று தலைவனது வீரத்தையும், அழகையும் திருமாலோடு ஒப்பிடுகிறாள். இதன்மூலம் நாம் அறிவது யாதெனின் புராணங்கள் ஆரிய பிராமணர்களால் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட புரட்டுகளல்ல.. கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள்  தமிழ்மண்ணில் காலம்காலமாக வழங்கி வந்தவையே! சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இராமன், கிருஷ்ணன் முதலியோரைப் புகழும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் தமிழரது ஏறுதழுவும் கலாசாரத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றது. மேலும் கிருஷ்ணனும்

சங்கத்தமிழ்_காட்டும்_கோவில் வழிபாடு - 32

Image
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 32 இன்று எப்படி தமிழரிடத்தே விரதம், திருக்குளத்தில் நீராடுதல், மணியடித்தல், துளசி சாற்றுதல், இறை திருநாமத்தைச் சொல்லி ஆரவாரித்தல் என  ஆலய வழிபாடும், இறை நம்பிக்கையும் உள்ளனவோ ,அனைத்துமே 2000 வருடங்களுக்கு முன்னரே சங்கக்காலத்திலிருந்தே இருந்துள்ளன. இடையில் வந்த ஆரிய கலாசாரம் என்றோ, சங்கத்தமிழர் நடுகல்லை மட்டுமே வணங்கினர் என்றோ திராவிட புராணங்கள் இனியும் பாட இயலாது. சங்கக்காலத்தில் இறை வழிபாடு எப்படி இருந்தது? பதிற்றுப்பத்து- 31 வரிகள் (1-10) குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்குக கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத் தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக் வண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய் அலங்கம் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர குன்றுகளால் சூழப்பட்டு, கடலை ஆடையாக உடுத்தியது இந்த நிலம். இங்கே திருமால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இருகரங்களைத் தலைமேல் சுமந்து, தங

சங்கப்புலவர்களின் கோத்ரங்கள்

Image
சங்கப்புலவர்களின் கோத்ரங்கள் கோத்ரம் என்பது ஒருவருடைய ரிஷி முதல்வனைக குறிக்கும். கௌன்டில்ய கோத்ரம் என்பதை கவுணியன் என்பது குறிக்கும் - புலவர் மதுரைக் கவுணியன் பூதத்தனர். காஷ்யப கோத்ரம் - காசிபன் கீரன் கௌசிக கோத்ரப் புலவர்கள் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பெருங் கௌசிகனார் கௌதம கோத்ரம் - பாலைக் கௌதமனார் ஆத்ரேய கோத்ரம் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் கள்ளில் ஆத்திரையனார் வாதூல கோத்ரம்- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சாண்டில்ய கோத்ரம் - கடம்பனூர் சாண்டில்யர் இதைத் தவிர சில வடமொழிப் பெயர்களை உடைய புலவரும் உள்ளனர். தாமோதரனார், கேசவனார், கோவர்தனர், பிரமசாரி, நல்லுருத்திரனார். மேலும், ஆரியன் பெருங்கண்ணன் ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன் இப்பெயர்களில் ஆரியன் என்பது ஆராயத்தக்கது சங்கப்புலவர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி சங்கப் புலவர் அகரவரிசை 1) அகம்பன் மாலாதனார் 2) அஞ்சியத்தை மகள் நாகையார் 3) அஞ்சில் அஞ்சியார் 4) அஞ்சில் ஆந்தையார் 5) அடைநெடுங்கல்வியார் 6) அணிலாடு முன்றிலார் 7) அண்டர் மகன் குறுவழுதியார் 8) அதியன் விண்ணத்தனார் 9) அதி இளங்கீரனார் 10) அம