சங்கத்தமிழ்_காட்டும்_சிவவழிபாடு - 39

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 39

சங்கக்காலத் தமிழர் சிவபெருமானைப் போற்றினர். முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல.



புறநானூறு பாடல் எண்-91 வரிகள் (5-7)

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே

இப்பாடல் ஔவையார் அதியமானைப் போற்றிப் பாடியது . பால் போன்ற வெண்ணிறம் உடைய பிறையினைச் சூடியவனும் , பிறையினைப் போன்ற நெற்றி உடையவனும் , நீல நிற கழுத்தை உடையவனுமான சிவபெருமானைப் போல் உன் புகழும் நிலைபெறட்டும் என்று அதியமானைப் போற்றி ஔவையார் பாடியது.

இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் சிவபெருமானை இன்று நாம் வணங்கும் உருவில் தான் சங்கத்தமிழரும் வணங்கினர், இடையே வந்த ஆரியப் புரட்டு என்று எதுவுமில்லை.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்