சங்கத்தமிழில் ஏறுதழுவுதல் -33

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-33

சங்கத்தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் வழங்கப்பட்டுவந்தனவா?
பார்ப்போம்



கலித்தொகை -103 வது பாடலில் வரும் வரிகள்

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு!

இந்த பாடல் ஏறுதழுவும் வீரனை வர்ணிக்கின்றது. தோழியானவள் தலைவியிடம் இளம் காளையினை தழுவுகின்ற உன் நாயகனைப் பார். அன்றொரு நாள் கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' எனும் குதிரை வடிவில் வந்த அசுரனை வாய் பிழந்து கொன்றழித்த கண்ணன் கூட இவ்வாறு தான் வீரத்தை வெளிப்படுத்தினானோ? என்று தலைவனது வீரத்தையும், அழகையும் திருமாலோடு ஒப்பிடுகிறாள்.

இதன்மூலம் நாம் அறிவது யாதெனின் புராணங்கள் ஆரிய பிராமணர்களால் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட புரட்டுகளல்ல.. கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள்  தமிழ்மண்ணில் காலம்காலமாக வழங்கி வந்தவையே! சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இராமன், கிருஷ்ணன் முதலியோரைப் புகழும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் தமிழரது ஏறுதழுவும் கலாசாரத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றது. மேலும் கிருஷ்ணனும் ஏறுதழுவியே நப்பின்னை என்ற பெண்ணை மணந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

பின் இணைப்பு

 
இந்தக் குஷாணர் காலத்துச் சிற்பம் இப்போது கராச்சியிலுள்ளது. கேசி என்னும் குதிரை உருக்கொண்ட அரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி. பொயு இரண்டாம் நூற்றாண்டாகக் கணக்கிடப்பெற்றிருக்கும் இந்தச் சிற்பத்திற்கு முன்னரே காசுகளில் இத்தகைய உருவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தக்ஷசிலா அருங்காட்சியகத்திலுள்ளது.

This panel depicting the assassination of the demon Kesi by Sri krishna belongs to Kushana period. This is dated as 2nd CE. It should be noted that some coins prior to this panel bear same type of image on them. This is placed in Taxila museum.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்