சங்கத்தமிழில் கிருஷ்ண பலராமன் -38

சங்கத்தமிழ்_காட்டும் _சனாதனதர்மம் -38




புறநானூறு பாடல் 58 வரிகள் 14-16

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன்நின் றாஅங்கு ,

சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் அருகருகே அமர்ந்திருந்த கோலத்தைக் கண்ட புலவர்  'பால் போன்ற வெண்ணிறம் உடைய பலராமனும் நீலநிறம் உடைய கிருஷ்ணாவும் அருகருகே அமர்ந்து இருப்பது போல உள்ளது என்கிறார் .

இதிலிருந்து  நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் பலராமனும் , கண்ணனும் தமிழரின் ஆதி தெய்வங்கள், திருமாலின் அவதாரங்களான இருவரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பெருந்தெய்வங்களாகவே இருந்துள்ளனர். 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்