சங்கத்தமிழ்_காட்டும்_வேதநெறி -31

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-31



வேதங்கள் பல்வேறு தெய்வங்களைப் போற்றினாலும், அத்தெய்வங்கள் அனைவரும் ஒன்றே, ஒரே தெய்வீக அம்சத்தின் பல்லவேறு வெளிப்பாடுகள் என்ற கொள்கையை மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன. நம் சங்கத்தமிழ் புலவர்கள் இதை கொள்கையை இவ்வாறு பாடியுள்ளனர்.

பரிபாடல் - திருமால்வாழ்த்து பாடல்- 3 வரிகள் 1- 10

தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்
மாசில் எண்முரும், பதினொரு கபிலரும்
தாமா இருவரும், தருமனும் மடங்கலும்,
மூவேள் உலகமும்,உலகினில் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தோம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து!

பொருள்- நீர், தீ உள்ளிட்ட பஞ்ச பூதங்களும், சூரிய, சந்திரனாகிய இரு சுடர்களும், அறம்-பொருள்-இன்பமும், ஐந்து கோள்களும்- செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களும், திதி, அதிதியின் புத்திரர்களான தேவர்களும், அசுரர்களும், குற்றமற்ற அஷ்ட வசுக்களும், பதினொரு ருத்திரர்களும், இரு அஷ்வினி குமாரர்களும், தர்மதேவன் ஒருவனும், மூன்று ஏழான இருபத்தொரு லோகங்களும், இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும், திருமாலே உன்னிடமிருந்து தோன்றியவையே, நீயே அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் ஆனவன், அவ்வாறே அழிவற்ற வேதங்கள் கூறுகின்றன, அதே வழியில் நாங்களும் உன்னைப் போற்றி வணங்குகிறோம்.

இதன்மூலம் இந்து சனாதனதர்மத்தின் அத்தனை கடவுளரும், கடவுட் கொள்கைகளும் தமிழரிடத்தே ஆண்டாண்டு காலமாக நிலைபெற்று வந்துள்ளன என்பதை உணரலாம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்