சங்கத்தமிழ் காட்டும் சனாதனதர்மம்-1- வீடுபேறு

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-1

பரிபாடல் என்பது எட்டுத்தொகையைச் சார்ந்த சங்கத்தமிழ் நூலாகும்.

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி என்ற கருத்தை இப்பாடல் விளக்குகிறது.

பாடல்

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!

(பரிபாடல். 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)
 

மறுபிறப்பு என்பது இந்து மதத்திற்கு மட்டுமே உரிய நம்பிக்கை ஆகும். மறுபிறவியை அறுக்க திருமாலின் திருவடியே வழியாகும் என்று கூறப்பட்டுள்ளது.... சங்கத்தமிழரின் சமயம் சனாதனதர்மமே என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இப்பாடல்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்